ஸ்கந்த ஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம்

ஸ்கந்த ஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம்

 

எமது ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஸ்கந்த ஷஷ்டி விரதமானது இன்றைய தினம் ஆரம்பமாகியது. ஸ்கந்த ஷஷ்டி விரத முதல் நாளான இன்று ஹோம பூஜையுடன் ஆரம்பமாகி, அபிஷேகம், பூசை, அலங்கார பூசை, கந்தபுராண பாராயணம் என்பன இடம்பெற்றன.

ஸ்கந்த ஷஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். ஷஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த ஷஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர். செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.

மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக “கந்தசஷ்டி” விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே ஸ்கந்த ஷஷ்டியாகும்.

 

 

 

Add Comment

Your email address will not be published. Required fields are marked *