Views Navigation

Event Views Navigation

Today

சிரமதானப் பணி

எமது ஆலயத்தில் நடைபெறவிருக்கின்ற சூரசம்ஹார நிகழ்வினையொட்டி  எமது அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் ஆலய வெளிவீதியில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சூரசம்ஹாரம்

ஸ்கந்த ஷஷ்டி  விரத இறுதி நிகழ்வான சூரசம்ஹாரம் 10.11.2021 (புதன்கிழமை) அன்று எமது ஆலய வெளிவீதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். அன்று காலை 11.00 மணிக்கு அபிஷேகம், பூசைகள் என்பன ஆரம்பமாகி, மதியம் 03.00 மணியளவில் சுவாமி வெளிவீதியில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார். முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி  வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்தார். இறுதியாக மாமரமாக […]

எமது ஆலய ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களின் மஹாசமாதி நினைவு தினத்தை முன்னிட்டு

எமது ஆலய ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களின் மஹாசமாதி தினத்தையொட்டி இன்றைய தினம் எமது அறநெறிப் பாடசாலையில், சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்கள் பற்றிய சிறு சொற்பொழிவுகள், ஒளிப் படக்காட்சி மற்றும் பூசை என்பன நடைபெற்று, இறுதியாக மாணவர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.